Friday, January 27, 2012

சுதந்திர தினத்தன்று அரச அலுவலகங்களில் தேசியக்கொடி கட்டாயம்

எதிர்வரும் சுதந்திர தினத்தன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரட்ண தெரிவித்தார். 'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி மற்றும் அதனோடு இணைந்த செயற்திட்டங்களுக்காக மட்டும் 21 ஆயிரம் மில்லியன் ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இக்கண்காட்சி தொடர்பில் விளக்கப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் பொது மக்களை அறிவூட்டுவதற்றாக 'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சியின் மூலமாக அநுராதபுர மாவட்ட நகரம் மிகவேகமான அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment