Thursday, January 26, 2012

கள்ளத் தொடர்பு வைத்திருந்த மனைவியின் பெண்ணுறுப்பில் தீ வைத்த கணவன்

தனது மனைவி பிறிதொரு நபருடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்த அந்தப் பெண்ணின் கணவன் அவளது பெண் உறுப்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தையடுத்துக் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் பிரகர்ஷ ரணசிங்க முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போதே இந்த விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கட்டது.

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடமை புரியும் இந்த நபர் கடந்த 12 ஆம் திகதி இரவு தனது வீட்டுக்குச் சென்று மின்சாரத்தைத் துண்டித்து விட்டு மனைவியை நிர்வாணப்படுத்திய பின்னர் மனவியின் பெண்ணுறுப்பில் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

அதன்போது அவரது மனைவி எழுப்பிய கூக்குரல் கேட்டு அயலவர்கள் உடனடியாகவே அங்கு விரைந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு தீ வைக்கப்பட்டதன் காரணமாக அவரது பெண்ணுறுப்பு மிகவும் மோசமான முறையில் எரிந்துள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர் இவர் கைது செய்யப்படும் போது அவரது கையில் பெற்றோல் கலன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தனது மனைவியுடன் பிறிதொரு ஆடவர் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாகவே இவர் இவ்வாறு செய்துள்ளார் என்ற தகவலும் அங்கு வெளியானது. (அ.வர்மா)

No comments:

Post a Comment