Friday, January 27, 2012

புளொட் லிங்கநாதன் பதிவி விலகினார். புதிய உறுப்பினர் பதவியேற்பு.

வவுனியா நகரசபையின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததையிட்டு அவரது இடத்திற்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவாம்பிள்ளை தேவகிங்ஸ்லி ராஜேஸ்வரன் (ரஞ்சன்) நியமிக்கப்பட்டிருந்தார்.

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவரான அவர் நகரசபை உறுப்பினராக பதவியேற்கும் வைபவம் நேற்று முற்பகல் 9.25மணியளவில் வவுனியா, 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் கம்பனி அலுவலகத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட கூட்டுறவுச்சபை தலைவரும், தேசிய கூட்டுறவுச்சங்க வடமாகாண பணிப்பாளரும், அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய இரா.சுப்பிரமணியம் அவர்களின் முன்னிலையில் இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் பவன், வவுனியா நகரசபைத் தலைவர் கனகையா, வவுனியா நகரசபை செயலாளர் வசந்தரூபன், நகரசபை உறுப்பினர்கள் குமாரசாமி, பார்த்தீபன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன், குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கபில்நாத், பெரியார்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் குருசாமி, சமளங்குளம் கமக்காரர் அமைப்பின் செயலாளர் த.யோகராஜா, செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் சு.யோகேஸ்வரன் (சிவம்), வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் கண்ணன் மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment