Sunday, January 8, 2012

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின், மருத்துவ பீடம் மற்றும் பட்ட பின் படிப்பு பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவித்தலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

இதற்கு அமைய விடுதிகளில் உள்ள சகல மாணவர்களையும் வெளியேறும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் நல்லொழுக்க அதிகாரி எம். டபிள்யூ ஜயசுந்தர கூறியுள்ளார்.

அண்மையில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.இந்த சம்பவத்தின் காரணமாக மீண்டும் அமைதியின்மை ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இன்று முற்பகல் எட்டு மணிக்கு பின்னர் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com