Thursday, January 19, 2012

யாழில் காணிப்பிரச்சினை முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் -இமல்டா

யாழ்.மாவட்டத்தில் காணி பிரச்சினைகள் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா தெரிவித்துள்ளார். யாழில் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவென 1933 என்ற விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அரச அதிபர் காணிகளை சூழ்ச்சி செய்து பெற்றுக் கொள்ளுதல், பலாத்காரமாக காணிகளை கையகப்படுத்துதல், பறிமுதல் செய்தல் போன்ற முறைப்பாடுகளை 1933, அல்லது, 0112-320141 ஆகிய இலக்கங்கள் மூலம் அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார.

No comments:

Post a Comment