Friday, January 27, 2012

விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் 1ம் வகுப்பு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியில் இவ்வாண்டு முதாலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் கடந்த திங்கட் கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சஜித் மோகன், கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் திருமதி தங்கா முருகன், ஆசிரிய ஆலோசகர் செல்வி ஜோசப், ஆகியோர் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தரம் இரண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment