Friday, January 6, 2012

பாடசாலை அனுமதிக்கு கப்பகேட்கிறார்களா? ஊடனே அறிவியுங்கள்.. முதல்வர் நடவடிக்கை

பிள்ளைகளை, பாடசாலைகளுக்கு அனுமதிக்கும்போது, பணம் பெற்றுக்கொள்வோர் தொடர்பாக, அறிவிப்பதற்கு, விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்த, மேல் மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேல் மாகாண பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்போது, இவ்வாறு பணம் பெற்றுக்கொள்வோர் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு, மாகாண சபையில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 0112-698410 அல்லது 075-922300 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாடுகளை செய்ய முடியும். முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்போது, சேவை கட்டணம் மற்றும் வசதி கட்டணம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, உதவிப் பத்திரங்களாகவோ, வேறு விதங்களாகவோ பணம் பெற்றுக்கொள்ள முடியாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com