Sunday, January 8, 2012

யாழ்.குடாநாட்டு அரச காணிகளை யாருக்கும் வழங்கக்கூடாது – யாழ் அரச அதிபர்.

யாழ் மாவட்டத்தில் உள்ள அரச காணிகளை தனியார், மற்றும் பொது நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது யாழ் மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலர்கள், உதவி அரச அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் உள்ள சகல பிரிவுகளையும் சார்ந்த அரசகாணிகளை தனியாருக்கு அல்லது நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என ஜனாதிபதி செயலணி அறிவித்ததை அடுத்து அவர் இவ்வாறு பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவிவரும் காணிப்பற்றாக்குறை காரணமாக தனியார் துறையினரும் நிறுவனங்களும் அரச காணிகளைக் குத்தகைக்குப் பெற்றுப் பயன்படுத்துவதற்கு முயல்கின்றன. இதனைத் தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கடிதங்கள் அரச அதிபரால் கடந்த வாரம் பிரதேச செயலர்கள் மற்றும் உதவி அரச அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com