Sunday, January 8, 2012

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரன கொலை வழக்கில் 95 வீதமான விசாரணைகள் நிறைவு

கொலன்னாவப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரன தொடர்பான வழக்கு விசாரணைகள் விரைவில் நிறைவடையும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

95 வீதமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளின் அறிக்கையும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து, விசாரணை அறிக்கையை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஸ்மன் தரப்பைச் சேர்ந்த ஒருவரும், துமிந்த சில்வாவின் தரப்பைச் சேர்ந்த 15 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அடையாள அணிவகுப்புக்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com