Thursday, January 19, 2012

634 பொலிஸ் சார்ஜன்களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதியரசர்களான கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, கே.சிறிபவன் மற்றும் ஜீ.ஏ.ரத்நாயக்க ஆகியோர் முன்னிலையில உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 06 மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரண்டு தரப்பினரதும் வாதபிரதிவாதங்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் 634 பொலிஸ் சார்ஜன்களுக்கு உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்குமாறும்,2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட விதத்தில் இந்த பதவி உயர்வுகளை வழங்குமாறு நீதியரசர்கள் குழாம் பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வுகள் சில வருடங்களுக்கு முன்னரே வழங்கப்பட வேண்டிய போதிலும், பிரதிவாதிகள் தாமதம் காரணமாக தமது தரப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.


No comments:

Post a Comment