Monday, January 9, 2012

கொழும்பு வடக்கில் 30 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பின் வடக்கு பகுதியில் இன்றிரவு 10.00 மணி முதல் நாளை மறுதினம் 11 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை 30 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது. களனி மேற்கு கரையோர நீர் வழங்கும் செயல்த்திட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனாலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பேலியகொட நகர சபை , வத்தளை மாபோல நகர சபை , ஜாஎல நகர சபை மற்றும் பிரதேச சபை, களனி பிரதேச சபை , வத்தளை பிரதேச சபை, மஹர பிரதேச சபை, தொம்பே பிரதேச சபை , பியகம பிரதேச சபை பகுதிகளிலும் மற்றும் பியகம, ஏற்றுமதி முதலீட்டு வலயம், தெகட்டன, மல்வான ஆகிய பகுதிகளிலும் இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com