Thursday, January 19, 2012

வேலையற்ற பட்டதாரிகள் 15 ஆயிரம் பேருக்கு வேலை

வேலையற்ற பட்டதாரிகள் 15 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக் கொள்வதன் பொருட்டு பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்படும் என்று சுதந்திர பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் சிரேஸ்ட உப தலைவரும், தகவல் தொழிநுட்ப அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com