Wednesday, January 18, 2012

சட்டவிரோத மதுபான வடிசாலைசுற்றிவளைப்பு! 11812 லீட்டர் மதுபாணம் மீட்பு

மினுவாங்கொட, அஸ்வான பகுதியில் அத்தனகளுஓயா பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத வடிசாராய நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்து 10 லட்சத்திற்கும் கூடுதலான மதுபானத்தினை அங்கிருந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.  

கம்பஹா, குற்றத்தடுப்பு பிரிவு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இவர்களை தேடி, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து தயாரிக்கப்படும் மதுபானம் நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோ கிரேம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பஸ் வண்டியொன்றில் இவற்றை எடுத்துச்சென்ற இரண்டு சந்தேக நபர்களையும் பிபில பொலிஸார் கைது செய்துள்ளனர். பிபில, மஹியங்கனை தனியார் பஸ் வண்டியொன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். மிக நுணுக்கமான முறையில் பொதியிட்டு, இந்த போதைப்பொருளை திஸ்ஸமஹாராமவிலிருந்து எடுத்து வந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவரும், பிபிலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். 

No comments:

Post a Comment