Friday, January 27, 2012

முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு 10 வாரச் சிறைத் தண்டனை

சிங்கப்பூர் பொலிஸ் துறையில் ஸ்டாஃப் சார்ஜண்ட் பதவியில் இருந்த 37 வயது இட்ரிஸ் மாக்ரோப், சட்ட விரோதமாக வட்டித் தொழில் செய்து வந்த சிலரின் கேளிக்கை விடுதியில் பங்கும் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அக் குற்றத்திற்காக அவருக்கு நேற்று 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலிஸ் ஆணையாளரின் அனுமதி பெறாமல் குறிப்பிட்ட தொழிலில் நுழைந்தது மற்றும் அவருடடைய கூட்டுப் பங்காளிகளின் சட்ட விரோதமான நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருந்தது என்ற இரு குற்றங்களுக்காகவே இவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதே மாதிரியான வேறு இரண்டு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

No comments:

Post a Comment