Thursday, January 5, 2012

கடந்த வருடத்தில் 10,375 புலிகள் விடுவிக்கப்- பட்டுள்ளனர்.

கடந்த வருடம் 10 ஆயிரத்து 375 எல்ரிரிஈ உறுப்பினர்கள் சமுகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.. நீதிமன்ற உத்தரவின் பேரில் மேலும் 750 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் பகுதி பகுதியாகவே புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் சமூகமயப்படுத்தப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்,

நாங்கள் ஒவ்வொரு மாதமும் சமூகமயப்படுத்தும் நிகழ்வொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். ஜனவரி 22 ஆம் திகதி அரசியல்வாதிகளின் பங்களிப்புடன் நாங்கள் ஒரு சிலரை சமூகமயப்படுத்தவுள்ளோம். அன்றைய தினம் 74 பேர் சமூகமயப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com