Saturday, December 31, 2011

TNA பா.உ கள் நால்வரை மத்திய குழுவில் இணைத்துக் கொண்டது இலங்கை தமிழரசுக் கட்சி.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் புதிதாக நால்வர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று கட்சியின் தலைவர் சம்பந்தன் தலைமையில் அவரது வீட்டில் இடம்பெற்ற ஒன்று கூடலில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், யோகேஸ்வரன், சரவணபவான், சிறிதரன் ஆகியோரே இவ்வாறு மத்திய குழு வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளவர்களாவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு போட்டிகள் நிலவிவருகின்றது. இப்போட்டி இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், முன்னாள் ஆயுதக் குழுக்களிடையேயே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி தம்மை பலப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஆயுதக் குழுக்களைச் சாராத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வழங்கி கட்சியினுள் உள்வாங்கியுள்ளனர்.

இச்செயற்பாடுகள் கூட்டமைப்பினுள்ள காணப்படும் உட்கட்சி மோதலை மேலும் வலுவடையச் செய்யும் என எதிர்வுகூறப்படுகின்றது.

No comments:

Post a Comment