ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரோவின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட மொஹான் லால் கிரேரோவின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க கட்சியின் செயலாளருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து செயலாளர் அது தொடர்பில் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மொஹான் லால் கிரேரு குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment