Thursday, December 22, 2011

‘இ.மெயிலில்’ குவியும் கடிதங்கள்: ராகுலை திருமணம் செய்ய விரும்பும் பெண்கள்

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி. அடுத்த பிரதமர் இவர் தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டு வருபவர். 40 வயதை நெருங்கும் ராகுல்காந்தி திருமணம் ஆகாதவர். தற்போது உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முழு .கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இம்மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று தீவிரமாக உழைத்து வருகிறார். இந்நிலையிலும், அவர் தனது பெயரிலான இணைய தளமுகவரிக்கு வரும் இ.மெயில்களை படித்து, அவற்றுக்கு பதில் அளிக்க தவறுவது கிடையாது. சமீபகாலமாக இவருக்கு வரும் இ.மெயில்கள் திருமணத்தை வலியுறுத்தியே வருகின்றன.

நலம் விரும்பிகள் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளனர். சிலர் தகுந்த மணமகள் இருப்பதாக தெரிவித்தும், இ.மெயில் அனுப்பி உள்ளனர். இளம் பெண்கள் சிலர் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இ.மெயில் அனுப்புகின்றனர். இதுமாதிரியான இ.மெயில்கள் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் நாகரீகமான சாதுர்யமான பதில்களால் சமாளித்து வருகிறார்.

No comments:

Post a Comment