Tuesday, December 27, 2011

அவதானம்! அவதானம்! விதவைகட்கு வாழ்வு கொடுக்க வரும் புலம்பெயர் தமிழர்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து பலர் நமது விதவைகட்கு வாழ்வு கொடுத்துச் செல்கின்றனர். இவர்கள் எமது விதவைகட்கு வழங்கும் வாழ்வானது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகவே முடிகின்றது. புலம்பெயர் நாடுகளிலிருந்து விடுமுறை கழிக்க வரும் தமிழர் பலரின் கைங்கரியங்களுக்கு எமது விதவைகளும் , பல யுவதிகளும் இரையாகியுள்ளனர்.

இங்கு தங்கியிருக்கும் காலத்தில், பதிவு திருமணம்கூடச் செய்து விட்டு தமது வேலையை முடித்து விட்டுச் செல்லும் இவர்களைத்தேடியலையும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

சுவிஸிலிருந்து இங்கு வந்த நபர் ஒருவர் விதவைப் பெண்ணொன்றுக்கு வாழ்வ கொடுக்கப்போவதாக கூறி வன்னியில் யுத்தத்தில் கணவனை இழந்த இளம் பெண்ணொருவரை திருமணம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

அங்கு சென்று தனக்கு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் தொலைபேசியில் பால்வடிய பேசும் இவரிடம் என்னைக் கூப்பிடுங்கள் என்றால், அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என காலம் கழித்து வந்துள்ளார். சந்தேகம் கொண்ட பெண் சற்று விசாரணைகளை ஆரம்பித்தபோது, அவர் சுவிற்சர்லாந்தில் திருமணம் புரிந்து மனைவி மற்றும் இரு மகள் மாருடன் வாழ்ந்து வரும் கதை பூதமாக வெளிவந்துள்ளது.

இது ஓர் உதாரணம் மாத்திரமே, இவ்வாறு பல பெண்கள் இங்கு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான ஏமாற்றுப்பேர்வழிகளில் பல வர்க்கத்தினர் உண்டு. இவர்களிடமிருந்து பெண்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். வெளிநாடுகளிலிருந்து வருகின்றார்கள் என்பதற்காக நம்பி வினையை விலைகொடுத்து வாங்குவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

2 comments:

  1. ஆடு நனைய ஓநாய் கவலை படுவது போல இந்த திருட்டு கூட்டம் பிடிப்பது புலிக்கொடி, பிதட்டுவது தமிழினம், தாயகம். ஆனால் சேட்டைகள், சுத்துமாத்துக்கள் எல்லாம் நொந்து போயுள்ள அப்பாவி ஈழத் தமிழர் மீது மட்டுமே.
    இந்த ஓநாய்க் கூட்டமே தமிழினத்தின் துரோகிகள்.

    ReplyDelete
  2. They haven't changed,still the same old guys.They only pretend and dramatize like heores .after all THEY ARE REAL bogus.it's foolish to go behind these culprits.Little money and outer show make these poor women to jump into the stinking canals.

    ReplyDelete