Tuesday, December 6, 2011

முடிச்சு மாறிகளான பெண்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறையும் அபராதமும்

நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் முடிச்சு மாறிகளாக செயற்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இரு பெண்களுக்கு நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏ.என்.எம்.பி. அமரசிங்க பத்து வருட காலம் ஒத்திவைத்த தலா இரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் மூவாயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.

; மாதம்பை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களுக்கே ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதத் தொகையும் விதிக்கப்பட்டது.

பிரதி வாதிகள் இருவரும் கட்டானை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடைய பணத்தை நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் வைத்து திருடிய போது, அங்கிருந்த பொது மக்களால் பிடிக்கப்பட்டு நீர்கொழும்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment