Thursday, December 8, 2011

நாளை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவு.

யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்ரமணியம் தவபாலசிங்கத்தின் காலம் இம்மாதம் 20ம் திகதியுடன் முடிவுறும் அதேநேரம் புதிய தலைவர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது. குதிரைக் கஜேந்திரனின் அடிவருடியான தவபாலசிங்கத்தற்கு அடுத்தபடியாக தமக்கு ஏதுவான ஒருவரை தெரிவு செய்து கொள்ளும் நோக்கில் மேற்படி தலைவர் தெரிவின் பின்னணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குதிரை கஜேந்திரன் செயற்படுவதாக தெரியவருகின்றது. ஆதேநேரம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இத்தெரிவு தொடர்பாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என மாணவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக மிதவாத கொள்ளையுடையோர் காலம் காலமாக நியமிக்கப்பட்டு பின்னர் மாணவர்கள் தவறான வழியில் வழிநடத்தப்படுகின்ற நிலைமை மாறவேண்டுமென பல்கலைக்கழக மாணவர்கள் விரும்புகின்றனர்.

மாணவர் ஒன்றியத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் வெற்றுக்கேஷங்களை எழுப்பி இலவச விளம்பரங்களை பெற்றுக்கொண்டு பின்னாட்களில் அரசியல் லாபங்களை பெற்றுக்கொண்டதும், அரசியல்வாதிகளாக மாறியமையும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஆனால் இவர்களால் தவறான வழி நடத்தப்பட்டவர்கள் அதற்கான விலையினைச் செலுத்திய சந்தர்ப்பங்கள் பல மிகவும் கசப்பானவை.

No comments:

Post a Comment