Thursday, December 15, 2011

இலங்கையின் உள்ளுர் விமான சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

கண்டி விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப கட்ட கண்காணிப்பு பணிகள், நாளை ஆரம்பமாகும். தொழில்நுட்ப அதிகாரிகளுடன் அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரியங்கர ஜயரட்ன, மஹிந்தானந்த அளுத்கமகே, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க ஆகியோர். இக்கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

கண்டி, குண்டசாலை பகுதியில் விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு, உத்தேசிக்கப்பட்டுள்ளது. கண்டி நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்களை பாதுகாத்து, சுற்றுலா புரியாக இதனை மாற்றியமைப்பதே, அரசாங்கத்தின் எதிர்பர்ப்பாகும். பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானம் காரணமாக அடைந்துள்ள முன்னேற்றங்கள், புதிய விமான நிலையம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம், மேலும் விரிவுபடுத்தப்படும்..

No comments:

Post a Comment