Friday, December 16, 2011

மட்டு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்தது! ஓருவர் மாயம்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவர் மீன்பிடிக்க சென்றபோது கடும் காற்றுக்காரணமாகவே தோணி கவிழந்துள்ளது.

இதன்போது அமிர்தகழி, சகாயமாத ஆலய வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய துரைசாமி புவனேந்திரன் என்பவர் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீரிழ் மூழ்கி விபத்துக்குள்ளான இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காணாமல்போன நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment