Saturday, December 17, 2011

'நான்கு கலீபாக்கள்'நூல் வெளியீட்டு விழா

சாய்ந்தமருதைச் சேர்ந்த மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) எழுதிய 'நான்கு கலீபாக்கள்'நூல் வெளியீட்டு விழா கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியமைமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டதுடன், விஷேட அதிதிகளாக ஜாமியா நளீமிய்யா கலாபீடப் பணிப்பாளர் கலாநிதி அகார் முஹம்மத் ,'அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், 'புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி உரையாற்றியதுடன் நீதியமைமைச்சர் ரஊப் ஹக்கீமிடமிருந்து நூலின் பிரதியொன்றை பெற்றுக்கொண்டார்.

(இலங்கை நெட் செய்தியாளர் ஏ.ஆர்.றஹ்மான்)

No comments:

Post a Comment