Saturday, December 17, 2011

நீர்கொழும்பில் சமுர்தி நத்தார் கலை விழா

நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் சமுர்தி மகா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்தி நத்தார் கலை விழா இன்று பிற்பகல் 3 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை , பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, மேயர் அன்ரணி ஜயவீர இந்;நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச செயலாளர் சாந்த முகாந்திரம, அருட் சகோதரர்கள் , பௌத்த தேரர்; மற்றும்; பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பெரும் எண்ணிக்கையானோர கலந்து கொண்ட இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நீர்கொழும்பு வலய பாடசாலை மாணவர்கள் மத்தியில் கரோல் பக்தி கீதம் மற்றும் நத்தார் பாடல் அபிநய போட்டிகளும் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment