Wednesday, December 7, 2011

முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் ரிஐடி யினரால் கைது.

முல்லைத்தீவு - முள்ளியவளை - காட்டுவிநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 7 மணியவில் அவருடைய வீட்டுக்கு சென்ற தீவிரவாத தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்ட இளைஞனை கைது செய்து வவுனியா ஜோசப் முகாமுக்கு கொண்டு சென்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

மணல் ஏற்றிச் செல்லும் தொழிலில் ஈடுபட்டுள்ள 23 வயதுடைய கணேசமூர்த்தி ரதன் என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளவராவர்.

குறிப்பிட்ட இளைஞனின் தாயார் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்தபோது, முல்லைத்தீவு பொலிஸார் தீவிரவாத தடுப்புப் பிரிவினரிடம் தொடர்பு கொண்டு வினவியுள்ளனர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

No comments:

Post a Comment