Thursday, December 29, 2011

காலி முகத்திடல் வியாபாரிகளுக்கு இன்று முதல் சீருடை.

காலி முகத்திடலில் பாவனைக்கு உதவாத வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து முகத்திடலில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள் ளவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று முதல் சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

ஒரு சில வர்த்தகர்கள் துணி வகைகளுக்குப் பயன்படுத்தும் வர்ணக் கலவைகளை உணவுகளுக்கு பயன்படுத்தியுள்ளதுடன், அத்தகைய வரத்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment