Thursday, December 22, 2011

ஐ.தே.க.வின் கட்சி தலைமையக தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கம் தொடர்பு

ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் ரோஹன கமகே குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தலைமையகத்தின் மீது கற்களால் தாக்கியமை போன்று , தாக்குதல் மேற்கொள்ள பணித்தமையும் குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

.தலைமையகத்துக்கு முன்பாக இருந்தவர்கள் கற்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தெடர்புடையவர்கள் அல்ல எனவும், இதனுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இத்தாக்குதல் சம்பவத்துடன் அரசாங்கத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment