Monday, December 5, 2011

லக்பிம ஆசிரியர்மீது தாக்குதல்

கொழும்பு,கறுவாத் தோட்டத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுக்கான வருடாந்த ஒன்று கூடல் வைபவத்தின்போது, தான் சட்டத்தரணி ஒருவரால் தாக்குதலுக்குள்ளானதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 'லக்பிம நியூஸ்' பத்திரிகையின் ஆசிரியர் ராஜ்பால் அபே நாயக்க முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் நீதியரசர் தொடர்பாக கருத்து வெளியிட்டதன் காரணமாகவேதான் தாக்கப்பட்டதாக ராஜ்பால் அபேநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது ராஜ்பால் அபேநாயக்கவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

இது தொடர்பில் நான் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என அவர் கூறினார். கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment