Thursday, December 29, 2011

மினுவாங்கொடை நகர சபை உறுப்பினர் பாலத்தின் அடியிலிருந்து சடலமாக மீட்பு

மினுவாங்கொடை நகர சபை உறுப்பினர் தினேஷ் சந்திரசிறியின் சடலம் கொட்டதெனியாவ பகுதியிலுள்ள தியகம்பொல பாலத்தின் அடியிலிருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. அவர் திட்டமிடப்பட்டு வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலத்தை பாலத்தின் அடியில் போடப்பட்டடிருப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அவரின் மோட்டார் சைக்கிளும் சடலத்துக்கு அருகில் காணப்பட்டது. சடலம் கண்டுபிடிக்கப்ட்டபோது மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்தது. அவரின் செல்லிடத் தொலைபேசி, தலைக்கவசம், பாதணிகள் என்பன வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டன.

28 வயதான தினேஷ் சந்திரசிறி, இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியவர். பின்னர் இவர் மினுவாங்கொடை நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

No comments:

Post a Comment