Thursday, December 22, 2011

சிறிகொத்தவில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக ஹேமா பிரேமதாசவிடம் பொலிஸார் வாக்கு மூலம்

சிறிகொத்தவில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பனர் சஜித் பிரேமதாசவின் தாயாரும் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் பாரியாருமான ஹேமா பிரேமதாசவிடம் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பெறவுள்ளதாக தெரவிக்கப்படுகிறது என்று கொசிப் லங்கா நிவ்ஸ்கொம் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கலவரம் ஏற்பட்ட தினத்தன்று காலை சிறிகொத்த முன்பாக ஒன்று கூடியிருந்தவர்களுக்கு பகல் உணவு மற்றும் தண்ணீர் என்பவற்றை ஹேமா பிரேமதாச மற்றும் அவரது மகள் துலாஞ்சலி ஜயகொடி வழங்கியுள்ளதாகவும், அவர்கள் அவ்வாறு செய்திருப்பது கலவரத்தை ஏற்படுத்தியவர்களுடன் ஏதேனும் தொடர்பு அவர்களுக்கு இருந்ததன் காரணமாகவே என சந்தேகிக்கும் பொலிஷார், கலகக்காரர்கள் தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே ஹேமா பிரேமதசவிடம் வாக்கு மூலம் ஒன்றை பெறவுள்ளதாக அந்த செய்தி குறிப்படுகிறது.

1 comment:

  1. They make the burning fire and add the fuel to the fire.This is an international technique to make yourself warm in the burning fire.
    Technocrats can do wonders.

    ReplyDelete