Thursday, December 29, 2011

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நெருக்கடிகளுக்கு, தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெகுசன தொடர்புசாதன மற்றும் முகாமைத்துவ பட்டப்பாடநெறியை தொடரும் மாணவர்களுக்காக விசேட முதுமானி பட்டத்தை தொடருவதற்காக விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நீக்க, பல்கலைக்கழக செனட் சபை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் உயர்கல்வியமைச்சின் மாணவர் விவகார பணிப்பாளர் நாயகம் கி.பீ. மாவல்லகேயிடம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பிரச்சினையை தீர்க்குமாறு, வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கமைய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சபையுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுடன், உரிய பரிந்துரைகளை, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment