மன்னார் அரச அதிபராக சிங்களவர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திற்கு முடிவு
மன்னார் மாவட்ட அரச அதிபராக பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது.
இவ்விடயத்தினை அறிந்த மன்னார் ஆயர் முதலில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வினைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது என அறிவுறுத்தியதை அடுத்து நேற்று இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளபோதும் ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறுமென அறியக்கிடைக்கின்றது.
மன்னார் மாவட்ட அரச அதிபராக முன்னர் திரு.வேதநாயகம் என்பவர் செயலாற்றி வந்த நிலையில் தற்போது திரு சரத் ரவீந்திர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment