Friday, December 30, 2011

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவிடுவீர். சர்வதேசத்திடம் சீனா வேண்டுகோள்.

இலங்கையின் அபிவிருத்திக்கு கரம் கொடுக்குமாறு சீனா சர்வதேச சமுகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு சீனா சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை நட்புறவு ரீதியான அண்டை நாடாகும். அங்கு உள்நாட்டு நெருக்கடி முடிவிற்கு கொண்டு வந்த நாள் முதல் சீனா இலங்கையுடன் மிக நெருக்கமான உறுவுகளை கொண்டுள்ளது.

இலங்கையின் சமூக நிலைப்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, புனரமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சாதகமான வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான புனரமைப்பு பணிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லியூவெய்மின் சீனாவின் சிங்ஹூவா இணையத்தளத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment