Saturday, December 3, 2011

பொலிஸ் நிலையத்தில் வைத்து மனைவி மீது துப்பாக்கிப் பியோகம் நடத்திய கணவன்

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்குள் இன்று காலை 19 வயது பெண் ஒருவர் மீது 26 வயதுடைய இராணுவ வீரரென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.

இராணுவ வீரரென சந்தேகிக்கப்படும் குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் தனது மனைவி என்றும், அப்பெண்ணின் பெற்றோர் தம்மை சேர்ந்து வாழ இடமளிக்கவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் குடும்பத்தாருடன் விசாரணைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் பின்னர் குறிப்பிட்ட நபர் கைக்குண்டொன்றை வீசியதாகவும் ஆனால் அக்கைக்குண்டு வெடிக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட இராணுவ வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த பெண் கராப்பிடிய வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment