Monday, December 19, 2011

வெடிபொருளுடன் பிடிபட்ட புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.

வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எல்ரிரிஈ யின் முக்கிய உறுப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இச்சந்தேக நபர் கொழும்பு உட்பட முக்கிய பிரதேசங்களுக்கு வெடிபொருட்களை எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

தம்மை விடுதலை செய்ய கோரி சந்தேக நபர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களம் இதனை நீதிமன்றத்திடம் தெரிவித்தது. சந்தேக நபர் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவின்; அறிக்கையும் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment