Thursday, December 29, 2011

பிரித்தானியாவில் இந்திய மாணவன் கொலை! மூன்றாவது சந்தேக நபரும் கைது.

பிரித்தானியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள மான்செஸ்டர் நகரில் இந்திய மாணவர் அனுஜ் பிட்வே கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நேற்று பிரிட்டன் போலிசார், மூன்றாவது சந்தேகப் பேர்வழி ஒருவரைக் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாணவன் 23 வயதுடைய அனுஜ் பிட்வே என இனம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் 16 வயது மற்றும் 17 வயதுள்ள இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புனே நகரைச் சேர்ந்த அனுஜ், கடந்த திங்கட்கிழமை, சர்ஃபோர்ட் என்னுமிடத்தில் தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து நண்பர்களுடன் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது இந்தச் சம்பவம் நடந்ததாக மான்செஸ்டர் போலிஸ் அனுஜின் பெற்றோரிடம் கூறியுள்ளது.

அனுஜுக்கு எதிரிகள் யாருமில்லையென்றும் அவர் எல்லாரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்றும் ஏராளமான நல்ல நண்பர்களைக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment