Sunday, December 11, 2011

திங்கட்கிழமை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

எதிர்வரும் திங்கட் கிழமை12 ஆம் திகதி க. பொ. த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிறது. திங்கற்கிழமை ஆரம்பமாகபோகும் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார் .

இந்த ஆண்டுக்கான க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இம்முறை தோற்றுவதாகத் அவர் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறும் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேரும் தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர்.இதற்காக நாடு முழுவதும் 3 ஆயிரத்து 920 மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment