Monday, December 5, 2011

கொழும்பு ஜம்பட்டா வீதியில் ஆள்கடத்தல்

கொழும்பு ஜம்பட்டா வீதியில் ஆட்கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 50 வயதான கிறிஸ்டோப்பர் பெர்னாண்டோ என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளவராவார். இன்று பிற்பகல் வேன் ஒன்றில் வந்த சிலர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.15 அளவில் குறித்த நபர் கடத்திச் செல்லப்பட்டதாக கடத்தப்பட்டவரின் உறவினர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இக்கடத்தல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜம்பட்டா வீதியில் பிரதேச மக்கள் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment