Monday, December 5, 2011

விலை மதிப்பீட்டு திணைக்களத்தின் கிழக்கு மாகாண தலைமை அலுவலகம் திறப்பு.

விலைமதிப்பீட்டு திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய பணிப்பாளர் பி.டபிள்யு.சேனாரட்ன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு, எல்லை வீதியில் அமைந்துள்ள இந்த திணைக்களத்தின் பெயர்ப்பலகையினையும் கட்டிடத்தையும் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் திறந்துவைத்தனர்.

பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் மூலம் கடந்த காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியோர் நன்மையடைவர்.





No comments:

Post a Comment