Sunday, December 18, 2011

ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல் : மூன்று பதவிகளுக்கு ஆறு பேர் களத்தில்

ஐ.தே.க.வின் உயர் பதவிகளுக்காக நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தலைமை பதவிக்காக ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிரதித் தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரும், தேசிய அமைப்பாளர் பதவிக்காக தயாசிறி ஜயசேகர மற்றும் தயா கமகே ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இத்தேர்தல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கரு ஜயசூரியவிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment