Thursday, December 8, 2011

யாழில் கணவன் மனைவி கொலை!

யாழ் நீர்வேலிப் பிரதேசத்தில் சற்று முன்னர் (இரவு 8.30) இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காணிப்பிணக்கு ஒன்று காரணமாக சகோதரன் தனது சகோதரியையும் கணவரையும் உலக்கையால் அடித்துக்கொலை செய்துள்ளதாக அறிய முடிகின்றது. நீர்வேலி ராசா வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உதயகுமார் 55 வயது என்பவரும் அவரது மனைவி நாகறஞ்சினி 48 வயது ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையாளி தப்பிஓடியுள்ளதாக அறியக் கிடைகின்றது. கொலையின் கண்கண்ட சாட்சியாக கொலையுண்ட பெண்மணியின் சகோதரி பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment