Thursday, December 29, 2011

பிரித்தானிய அரசாங்கத்திற்கு கொலை தொடர்பிலான தகவல்கள் தெளிவுபடுதப்பட்டுள்ளன.

தங்காலையில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றினுள் வைத்து, கொலை செய்யப்பட்ட வெளிநாட்டவரின் உறவினர்களுடன் நேற்றைய தினம் பகல் வரையில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகவும இந்த சம்பவம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும்,வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டவரின் உறவினர் எவரையேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில் உடனடியாக சடலத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்,கொலை செய்யப்பட்ட வெளிநாட்டவரின் சடலத்தை அரசாங்க செலவில் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது



..

No comments:

Post a Comment