Saturday, December 3, 2011

ஜேவிபியின் உட்கட்சி மோதல், மேல் மாகாண தலைவர் பதவி நீக்கம்.

மேல் மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிருந்த வருண தீப்த ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பதவிக்கு களுத்துறை மாவட்ட உறுப்பினர் வைத்தியர் நளீன் த ஜயதிஸ்ஸ நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருண தீப்த ராஜபக்ஷ தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்சிக் குழுவினருடன் இணைந்துள்ளதால் அவர் மேல் மாகாண மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பதவிக்கு புதிதாக நியமிக்கப்;பட்ட வைத்தியர் நளீன் த ஜயசிங்க கட்சியின் மத்திய செயற்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment