Wednesday, December 7, 2011

சிவராம் கொலை: சிங்கள ஜுரி சபை முன் விசாரிக்கக் கோருகிறார் பீட்டர்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சிங்களமொழி மூல ஜுரி சபை உறுப்பினர்களை நியமிக்குமாறு புளொட் அமைப்பின் முக்கியஸ்தரான ஆறுமுகம் ஸ்கந்தராஜா (பீட்டர்) நேற்று முன்தினம் நீதிமனறத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமைக் கடத்திச் சென்று கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர், நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக ஆஜரான போது நீதிமன்றத்திடம் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இதனையடுத்து எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய இந்த வழக்கு விசாரணைகளின் போது சிங்களமொழி மூல ஜுரிகளை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன உத்தரவிட்டா.

2 comments:

  1. சிவராம் கொலை விசாரணை! சிவராம் செய்த கொலைகளை யார் விசாரணை செய்வது?

    ReplyDelete
  2. சிவராம் தராகி புலிகளின் உளவாளி , பலரை காட்டி கொடுத்து கொலை செய்ததுடன் , புலிகளுக்கு பல ஆலோசனை , தகவல்களை வழங்கியுள்ளான்.

    ReplyDelete