Thursday, December 29, 2011

உடனிருந்து குழிபறித்தோரிடம் விளக்கம் கோரவுள்ளது அரசாங்கம்.

உள்ளுராட்சி நிறுவனங்களில் வரவு செலவுத்திட்டங்களை தோல்வியடையச் செய்த கூட்டமைப்பு உறுப்பினர்களிடம், விளக்கம் கோரப்படவுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்த கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் விளக்கம் கோருவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார். போப்பே போத்தல, தொடங்கொட ஆகிய பிரதேச சபைகளின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய நகர சபை, மிஹிந்தலை, வெலிமட, சூரியவௌ ஆகிய பிரதேச சபைகளின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடமும், விளக்கம் கோரப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment