Wednesday, December 21, 2011

ஆளில்லா விமானத் தாக்குதல்அமெரிக்கா தற்காலிக நிறுத்தம்

அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, பாகிஸ்தானுக்குள் நடத்தி வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை, அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., எல்லையில் நிகழ்ந்த நேட்டோ தாக்குதலை அடுத்து, அமெரிக்கா, பாக்., உறவு சீர்குலைந்தது. உறவைச் சீர் செய்ய, இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தெற்கு வஜீரிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில், அல்-குவைதா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக, மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை, அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

எனினும், மிக குறிப்பிடத்தக்க இலக்கு தட்டுப்படும் பட்சத்தில், தாக்குதல் நடத்தப்படும் என, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில், விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பதுதான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் எனவும், அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment