Sunday, December 18, 2011

சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பில் நடவடிக்கை

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதி பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக அந்தக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாத காலமாக தான் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மன்னிப்புப் பெற ஏதாவது ஒரு தரப்பு முன்வருமானால் தான் அதனை எதிர்க்கப் போவதில்லை எனவும், ஆனால் ஜனாதிபதி மன்னிப்பு பெற தமது குடும்ப உறுப்பினர்கள் எவரும் முன்வர மாட்டார்கள் எனவும் சரத் பொன்சேகா, திஸ்ஸ அத்தநாயக்கவிடம் நேற்று தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மன்னிப்பு குறித்த யோசனையை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதனை ஜனாதிபதியிடம் சமர்பிக்க கங்காராம விகாரையின் விகாராதிபதி தயாராகி வருவதாக திஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment