Monday, December 5, 2011

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பங்களாதேஷ் பிரஜை கைது

இலங்கை பணப் பெறுமதியில் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களுடன் பங்களாதேஷ் செல்வதற்கு முற்பட்ட நபரொருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து பங்களாதேஷ் செல்வதற்கு முற்பட்ட மேற்படி நபர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரின் கைப்பையை சோதனையிட்ட போது அதில் இலங்கை ரூபாப்படி ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்டஅமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

45 வயது மதிக்கத்தக்க பங்களாதேஷ் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

No comments:

Post a Comment