Wednesday, December 21, 2011

குவைட்டிலுள்ள இலங்கைத்தூதரகத்தில் விசாரணை செய்ய குழு விரை கின்றது.

குவைட் நாட்டுக்கான இலங்கை தூதுவராலயக் காரியாலத்தில் கடந்த காலங்களில் நடந்த சம்வங்கள் எனக் கூறப்படும் விடயங்கள் தொடர்பாக கண்டறிவதற்கென விசேட பரிசோதனைக் குழுவினரை அந்நாட்டுக்கு அனுப்புவதற்கு இலங்கை வெளிநாட்டு சேவை பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சிரேஷ;ட அதிகாரிகள் இதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர் இவர்கள் ஒரு வாரத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment